தொடர் வாகன திருட்டு வழக்கு ; சந்தேகத்தின் பேரில் கணவன், மனைவியை பிடித்து போலீசார் விசாரனை

0 2086
தொடர் வாகன திருட்டு வழக்கு ; சந்தேகத்தின் பேரில் கணவன், மனைவியை பிடித்து போலீசார் விசாரனை

கோவை சிங்காநல்லூரில், தொடர் வாகன திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கணவன், மனைவியை பிடித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரில் இரவு நேரங்களில், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் திருடு போவதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதுடன், கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். சிங்காநல்லூர் பகுதியில் வீட்டின்முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை ஒருவர் எடுத்து செல்வதும், அவருடன் ஒரு பெண் இருப்பதும் பதிவாகியிருந்தது.

அதன் அடிப்படையில், அதே பகுதியில் வசித்து வந்த கணவன் மனைவியை பிடித்து விசாரித்து வரும் போலீசார், அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments