ரூ.73 லட்சம் மோசடி செய்ததாக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மீது வைர வியாபாரி புகார்

0 2475
ரூ.73 லட்சம் மோசடி செய்ததாக இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் மீது வைர வியாபாரி புகார்

சென்னையில் வைர வியாபாரியிடம் 73 லட்ச ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர்கள் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷமூல் ஹக் என்பவர் சென்னையில் வைர வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஷமூல் ஹக்கிடம் வைரக்கற்களை வாங்கிய நைனா மற்றும் முகமது லாஹிர் ஆகியோர் 73 லட்ச ரூபாயை தராமல் மோசடி செய்துவிட்டதாகக் கூறி ஷமூல் ஹக் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

பணத்தைக் கொடுத்துவிடுவதாக போலீசிடம் உறுதியளித்த இருவரும், பல மாதங்கள் கடந்தும் இதுவரை பணம் தரவில்லை என்று ஷமூல் ஹக் வேதனை தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments