பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு

0 2912
பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் தேர்வு

பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராகச் சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் முதலமைச்சரை மாற்றக் கோரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர்.

இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் பதவி விலகினார். சண்டிகரில் இன்று காலையில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் யார் என்பதில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராகச் சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments