ரயில்வே சுரங்கப்பாதை நீரில் மூழ்கி மருத்துவர் உயிரிழப்பு

0 2730
ரயில்வே சுரங்கப்பாதை நீரில் மூழ்கி மருத்துவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் காரில் சென்ற அரசு மருத்துவர் தேங்கியிருந்த மழை நீரில் சிக்கி உயிரிழந்தார். ஓசூரில் அரசு மருத்துவராகப் பணியாற்றிய சத்யா மற்றும் அவருடைய மாமியார் ஜெயம் ஆகியோர் கார் மூலம் சொந்த ஊரான தொடையூருக்கு சென்றனர்.

பலத்த மழை காரணமாக தொடையூர் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி இருந்தது. இதனை அறியாமல் கார் மூலம் கடக்க முயன்ற போது சிக்கி கொண்டதால் இருவரும் மூச்சுத் திணறி மயங்கினர். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காரை உடைத்து இருவரையும் மீட்டனர். அதில் சத்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments