பெங்களூருவில் ரூ.2 கோடி மதிப்பிலான சிந்தெடிக் போதை பொருள் பறிமுதல்

0 1405

பெங்களூருவில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கிலோ எடையுள்ள சிந்தெடிக் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெட்டதாசபுரா பகுதியில் வசித்து வரும் முதிய தம்பதியினரிடம் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து அங்கேயே சிந்தெடிக் போதை மருந்து தயாரித்து வந்துள்ளார்.

மேலும் இந்த மருந்தை வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்து வந்த நிலையில் அவரை போதைப் பொருள் தடுப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து சிந்தெடிக் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் , தேவையான உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments