திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்தவர்கள் குறித்து தகவல் அளித்த அதிமுக நிர்வாகி மீது மாட்டு சாணத்தை வீசியெறிந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்

0 2393
திருட்டுத்தனமாக தண்ணீர் எடுத்தவர்கள் குறித்து தகவல் அளித்த அதிமுக நிர்வாகி மீது மாட்டு சாணத்தை வீசியெறிந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திருட்டுத்தனமாக போர் போட்டு, தண்ணீர் எடுத்து வணிக நிறுவனங்களுக்கு விற்பனை செய்த நபர்களை காட்டிக் கொடுத்த அதிமுக நிர்வாகி மீது மாட்டு சாணத்தை வீசியெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடியாச்சேரியை சேர்ந்த சுரேஷ் குமார் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், அந்த பகுதியில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் திருட்டுத்தனமாக போர் போட்டு தண்ணீர் எடுத்தது குறித்து தகவல் அளித்ததோடு, தண்ணீர் ஏற்றி வந்த லாரியை மடக்கி போலீசில் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியே வந்த சுரேஷ்குமார் மீது மர்ம நபர்கள் சிலர் மாட்டு சாணத்தை வீசியெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சுரேஷ்குமார் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுரேஷ்குமாரின் தங்கை லாரிக்கு முன் படுத்துக் கொண்டு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY