தேசிய மாணவர் படையை மேம்படுத்த மத்திய அரசு அமைத்த குழுவில் இடம்பெற்றுள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி

0 2662
தேசிய மாணவர் படை மேம்படுத்தும் குழுவில் எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளார்

தேசிய மாணவர் படையை மேம்படுத்த அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ளார்.

தேசிய மாணவர் படையை மேம்படுத்த 15 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், முன்னாள் எம்பி பைஜயந்த் பாண்டா உயர்மட்ட ஆய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவில் உறுப்பினர்களாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் முன்னாள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments