ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரின் மனைவி பெயரில் மலேசியாவில், ரூ.551 கோடி முதலீடு - தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம்

0 2855
ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரின் மனைவி பெயரில் மலேசியாவில், ரூ.551 கோடி முதலீடு

கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரின் மனைவி பெயரில் மலேசியாவில், 551 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நிதி நிறுவனம் நடத்தி 600 கோடி மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சாமிநாதன் உட்பட 7 பேர் கைதாகினர். இந்த நிலையில், எம்.ஆர்.கணேஷின் மனைவி அகிலாண்டம் மற்றும் நிதி நிறுவன அலுவலக பணியாளர் வெங்கடேசன் ஆகியோர் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்த போது, வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது .

ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான எம்.ஆர்.கணேஷின் மனைவி துபாய் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதும், அவர் பெயரில் மலேசியாவில், 551 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும் தெரியவந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, அகிலாண்டத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments