செம்மரக் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பி வரும்போது கிணற்றில் விழுந்து கூலித் தொழிலாளி இறந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது

0 2393
செம்மரக் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பி வரும்போது கிணற்றில் விழுந்து கூலித் தொழிலாளி இறந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே செம்மரக் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பி வரும்போது கிணற்றில் விழுந்து கூலித் தொழிலாளி இறந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எருக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த இராஜாவும் கருமந்துறையைச் சேர்ந்த சிலரும் அவ்வப்போது ஆந்திராவுக்குச் சென்று செம்மரங்களை வெட்டி விற்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. கூட்டாளிகளுக்குத் தெரியாமல் இராஜா சில செம்மரங்களை விற்றுவிட்டதாகக் கூறி, அவரை சக கூட்டாளிகள் கடத்திச் சென்றனர்.

6 லட்ச ரூபாய் கொடுத்தால் அவரை விட்டுவிடுவதாக உறவினர்களிடம் அவர்கள் பேரம் பேசிய ஆடியோவும் வெளியானது. கடந்த திங்கட்கிழமை இரவு கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பாழடைந்த கிணறு ஒன்றில் விழுந்து இராஜா இறந்ததாகக் கூறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக், திலீப், ஜீவா ஆகியோரை கைது செய்துள்ள போலீசார், மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments