கோவில் நில ஆக்கிரமிப்பாளர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

0 2579
கோவில் நில ஆக்கிரமிப்பாளர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராகக் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் அறங்காவலர்கள் 5 பேரை அறநிலையத் துறை நீக்கியது.

இதை எதிர்த்து ஸ்ரீதரன் என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீதரனை நீக்கிய அறநிலையத் துறை உத்தரவை ரத்து செய்தார். அதே சமயம், கோவில் நிலத்தை யாரேனும் ஆக்கிரமித்திருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார்.

கோவில் நிலம், சொத்து, நகைகளை மீட்கும் நடவடிக்கைகளைக் கண்காணிக்கச் சிறப்புப் பிரிவை ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments