செம்மரக் கடத்தலில் தகராறு.. சக கூட்டாளியை கடத்திய கும்பல்.. தப்பிக்கும்போது கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு!

0 2187

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை சக கூட்டாளிகள் கடத்தி வைத்திருந்த நிலையில், அவர்களிடமிருந்து தப்பிச் செல்லும்போது கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாவும் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலரும் அவ்வப்போது ஆந்திரா சென்று செம்மரங்களை வெட்டி விற்பனை செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

கடந்தமுறை வெட்டிய செம்மரங்களை போலீசுக்குப் பயந்து ஓரிடத்தில் மறைத்துவைத்துவிட்டு ஊர் திரும்பியுள்ளனர். சில நாட்கள் கழித்து கூட்டாளிகளுக்குத் தெரியாமல் ஆந்திரா சென்ற இராஜா, அந்த செம்மரங்களை சுமார் 6 லட்ச ரூபாய்க்கு விற்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

இதனையறிந்த சக கூட்டாளிகள் இராஜாவை கடத்திச் சென்று புதுப்பட்டி பகுதியில் ஒளித்து வைத்துக் கொண்டு அவரது உறவினர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கடத்தல் கும்பல் போதையில் இருந்த நேரம் பார்த்து, இராஜா அவர்களிடமிருந்து தப்ப முயன்றதாகவும் இருட்டில் அங்கிருந்த கிணறு ஒன்றில் விழுந்து அடிபட்டு இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments