கணவன் உயிருக்கு ஆபத்து எனக் கூறி புதுமணப் பெண்ணிடம் தாலியைத் திருடிய மர்ம நபர்

0 2321

சென்னையில் புதுமணப் பெண்ணிடம் சூனியம் எடுப்பதாகக் கூறி தாலிச் சரடைத் திருடி சென்றவரை சிசிடிவி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

ஜஸ் ஹவுசை சேர்ந்த ரிஹானா பேகத்திடம், வெளியே சென்றுள்ள அவரது கணவர் ரத்த காயத்துடன் வீடு திரும்புவார் என்றும், சூனியம் எடுக்க தாலியை தருமாறு மர்ம நபர் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் பானைக்குள் மாந்திரீகம் செய்து தாலியை மூடி வைத்துள்ளதாகவும் ஒருமணி நேரத்திற்கு பின் பானையை திறந்து தாலியை எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு தப்பியதாக சொல்லப்படுகிறது.

பானையை திறந்த பெண்ணிற்கு அதிர்ச்சியாக அதில் வெறும் கல் மற்றும் மண் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments