18 மாதங்களுக்குப் பின் அலுவலகத்துக்குத் திரும்பும் விப்ரோ பணியாளர்கள்

0 16348
18 மாதங்களுக்குப் பின் அலுவலகத்துக்குத் திரும்பும் விப்ரோ பணியாளர்கள்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் பணியாளர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் திங்கள் முதல் அலுவலகத்துக்குத் திரும்புகின்றனர். கொரோனா சூழலில் கடந்த ஆண்டு மார்ச் இறுதி வாரத்தில் நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அப்போது முதல் விப்ரோ பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் விப்ரோ தலைவர் ரிசத் பிரேம்ஜி இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 18 மாதங்களுக்குப் பின் பணியாளர்கள் நாளை திங்கட்கிழமை அலுவலகத்துக்கு வர உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டதாகவும், வாரத்தில் இருநாட்கள் அலுவலகத்துக்கு வந்து சமூக இடைவெளியுடன் பணியாற்றுவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments