தலைக்கவசம் அணிந்து மருந்து கடையில் கைவரிசை ; கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.50,000 கொள்ளை

0 2092
தலைக்கவசம் அணிந்து மருந்து கடையில் கைவரிசை

கும்பகோணம் அருகே தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் மருந்து கடையின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கும்பகோணம் - திருவிடைமருதூர் சாலையில், செட்டி மண்டபம் பகுதியில் உள்ள மருந்து கடையின் பூட்டை உடைத்து தலைக்கவசத்துடன் உள்ளே புகுந்த மர்ம நபர் கல்லாபெட்டியில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றான்.

முகம் தெரியக்கூடாது என்பதற்காக ஹெல்மெட் அணிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை கும்பகோணம் போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments