நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரிந்த புலி - வாகன ஓட்டிகள் அச்சம்

0 3047
நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரிந்த புலி - வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் நள்ளிரவில் சாலையில் சுற்றித் திரியும் புலியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நேற்றிரவு, திம்பம் மலைப்பாதையின் 26ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்பு சுவற்றில் கம்பீரமாக படுத்திருந்த புலியை அவ்வழியாக காரில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

காரின் முகப்பு வெளிச்சம் தன் மீது படுவது தெரிந்த புலி, மெதுவாக எழுந்து சென்று சாலையோர தடுப்பு சுவரிலிருந்து கீழே இறங்கி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments