மளிகைக் கடையில் ஷட்டரின் பூட்டை உடைத்து ரூ.52,000 கொள்ளை
கும்பகோணத்தில் உள்ள மளிகைக்கடை ஷட்டரின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 52,000 ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர்.
கும்பகோணம் மோதிலால் தெருவில் சரவணன் என்பவர் நடத்திவரும் மளிகை கடையில், நள்ளிரவு பைக்கில் வந்த மர்மநபர்களில் ஒருவர் பைக்கில் அமர்ந்திருக்க, மற்றொருவர் ஷட்டரின் பூட்டை உடைத்து கல்லா பணத்தை கொள்ளையடித்து சென்றது சிசிடிவியில் பதிவாகியது.
Comments