கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு 5ஆயிரம் வழங்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

0 2375

அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்களில் மொட்டை போடும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் தலா 5ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

கோயில்களில் மொட்டை போடுவதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது என 2 நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், மொட்டை போடும் பணியாளர்கள் பாதிக்கப்படக் கூடும் என திமுக எம்.எல்.ஏ. நந்தகுமார் இன்றைய கூட்டத்தொடரில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, திருக்கோயில்களில் மொட்டையடிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் தலா 5000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments