வணிகவரி துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை.. அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட 20 புதிய அறிவிப்புகள்..!

0 3478

வணிகவரி துறையின் சேவைகள் அனைத்தும் தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானிய கோரிக்கை விவாதத்தில், அமைச்சர் மூர்த்தி 20 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

போலி பட்டியல் தயாரிக்கும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வணிகவரித் துறையில் புதிய 7 புதிய நிர்வாக கோட்டங்கள் உருவாக்கப்படும், பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments