புதுச்சேரியில் முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவர் தனது 100-வது பிறந்த நாளுடன் ஆசிரியர் தின கொண்டாட்டம்

0 2797

புதுச்சேரி, தர்மாபுரி தனகோடி நகரில் ஆசிரியர் தினத்தோடு சேர்த்து தனது 100-வது பிறந்த நாளையும் முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவர் கொண்டாடி உள்ளார்.

1921 ஆம் ஆண்டு பிறந்த விழுப்புரம் மாவட்டம் இறையானூரை சேர்ந்த பங்காருசாமி, 1948 ஆம் ஆண்டு ஆசிரியராக பொறுப்பேற்று, தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றவர்.

நேற்று 100-வது பிறந்த நாளை கொண்டாடிய பங்காரு சாமிக்கு அவரது உறவினர்கள் இணைந்து விழா எடுத்தனர். தன் 100-வது பிறந்த நாளை ஆசிரியர் தினத்துடன் சேர்த்து தன் முன்னாள் மாணவர்கள், பணியாளர்களுடன் பங்காரு கொண்டாடினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments