காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை எதிரொலி ; ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு

0 2469
ஒகேனக்கல்லில் இன்று நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு ஆறாயிரத்து 142 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து ஐயாயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

இத்துடன் கர்நாடகத்தில் காவிரி வடிநிலப் பகுதிகளில் பெய்யும் மழை நீரும் சேர்வதால் தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  ஐந்தருவி, சினி பால்ஸ், மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments