புதிய ஆப்கானில் அமைதியான ஆட்சி அமைய விருப்பம் ; இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் பேச்சு

0 2007
புதிய ஆப்கானில் அமைதியான ஆட்சி அமைய விருப்பம்

புதிய ஆப்கானிஸ்தானில் அமைதியான ஜனநாயக ஆட்சி அமைய விரும்புவதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் Nikolay Kudashev தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இந்திய ராணுவத் துணைத் தளபதி சந்தி பிரசாத் மோகந்தியுடன், அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து ஆப்கானில் அமைதியான ஆட்சி அமைவதே மாஸ்கோ மற்றும் டெல்லியின் ஒருமித்த கருத்தாக உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து தூதரகத்தில் Nikolay Kudashev மற்றும் துணைத் தளபதி சந்தி பிரசாத் மோகந்தி ஆகியோர் இணைந்து இரு நாடுகளின் நட்புறவை மேம்படுத்தும் விதமாக மரக் கன்று நட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments