ரயில் உள்ளாடையுடன் சுற்றித் திரிந்த எம்எல்ஏ ; தட்டிக்கேட்ட பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு

0 6558
தட்டிக்கேட்ட பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டு

ரயிலில் பயணிகள் முன்பு உள்ளாடையுடன் நடந்து சென்றதாக பீகார் எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் தனது செயலை நியாயப்படுத்தி உள்ளார்.

ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏவாக இருப்பவர் கோபால் மண்டல். இவர் பாட்னாவிலிருந்து டெல்லி செல்லும் தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் போதையில் உள்ளாடையுடன் நடந்து சென்றதாகவும், அதனை கண்டித்த பயணியிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து கோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வயிற்றுவலி காரணமாக உள்ளாடையுடன் பயணித்ததாக கோபால் மண்டல் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments