சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுடன் நடிகர் ஆர்யா சந்திப்பு

0 3561
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுடன் நடிகர் ஆர்யா சந்திப்பு

நடிகர் ஆர்யா சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து பேசினார். திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக ஜெர்மனி வாழ் ஈழத் தமிழ் பெண் அளித்த புகாரில், முதலில் நடிகர் ஆர்யாவுக்கு தொடர்பில்லை என போலீசார் கூறியிருந்தனர்.

ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், நடிகர் ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகயும், அவரது தாயார் பெயர் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், ஆர்யா மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை வேப்பேரியிலுள்ள காவல் ஆணையர் அலுவலகம் வந்த ஆர்யா, ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து பேசினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments