வணிகரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட வசந்தி, மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்

0 3411
சிறையில் அடைக்கப்பட்ட வசந்தி, மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரையில் வணிகரை மிரட்டி 10 லட்ச ரூபாய் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் வசந்தியை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

மதுரை-தேனி சாலையில், வாகன தணிக்கையின் போது  நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி, தனது தம்பி மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து அர்சத் என்பவரை மிரட்டி 10 லட்ச ரூபாய் பறித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரில் தலைமறைவாக இருந்த காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககோரி போலீசார், அவரை மதுரை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments