நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

0 3974

கொலை மிரட்டல், அவதூறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நடிகை மீரா மிதுனை, ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில், குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டியலினத்தவர்களை இழிவாக பேசிய புகாரில் நடிகை மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபல நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மீரா மிதுன் மீது 30 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோன்று, சமூகவலைதளத்தில் அவதூறாக பேசியதாக ஜோ மைக்கேல் என்பவர் கொடுத்த புகாரில், கடந்த 26-ம் தேதி மீரா மிதுன் மீது ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments