50 வயதான தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை செய்த கணவன்..

0 3562
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 50 வயதான மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரைக் கொலை செய்து உடலை சாக்குப்பையில் கட்டி வீசிய 65 வயதான கணவன் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 50 வயதான மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரைக் கொலை செய்து உடலை சாக்குப்பையில் கட்டி வீசிய 65 வயதான கணவன் கைது செய்யப்பட்டார்.

ஜோகிர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சின்னப்பாப்பா என்ற அந்தப் பெண்ணைக் காணவில்லை என அவரது மகன் 2 நாட்களாகத் தேடி வந்துள்ளார்.

மனைவி காணாமல் போனது குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருந்த தனது தந்தை மீது சந்தேகம் கொண்டு அவரைத் தீவிரமாக விசாரித்தபோதுதான், சின்னப்பாப்பாவை கொலை செய்து உடலை சாக்குப்பையில் கட்டி குப்பை மேட்டில் வீசிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணையில் மனைவியின் நடத்தை மீது கொண்ட சந்தேகத்தில் கொலை செய்தது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments