12 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு டெல்லியில் பெய்த கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

0 2991
டெல்லியில் 12 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இன்று கனமழை பதிவாகி உள்ள நிலையில், இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் 12 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இன்று கனமழை பதிவாகி உள்ள நிலையில், இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக, டெல்லியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளான நொய்டா, தாத்ரி, மீரட் உள்ளிட்ட இடங்களில், இடியுடன் கூடிய அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments