டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி - இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார்

0 5913
இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்றார். உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதன் மூலம் பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மாரியப்பனின் தாயார் சரோஜா நாட்டிற்காக மீண்டும் ஒரு முறை மாரியப்பன் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments