ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியிடம் 7 சவரன் தங்க செயின் பறிப்பு - வடமாநில கொள்ளையர்கள் இருவர் கைது

0 3008

சென்னையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியிடம் 7 சவரன் தங்க செயினை பறித்து சென்ற வடமாநில கொள்ளையர்கள் இருவரை சிசிடிவி மற்றும் செல்போன் சிக்னல் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

கோட்டூர்புரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஆனந்தி என்பவரிடம் இருந்து 7 சவரன் தங்க சங்கிலியை மர்மநபர் பறித்து சென்றதாக அளிக்கப்பட்ட புகாரில், சிசிடிவி மூலம் கொள்ளையன் செல்போனில் பேசியதை கண்டுபிடித்தனர்.

சிக்னலை வைத்து அந்த நேரத்தில் குறிப்பிட்ட செல்போனில் பேசிய கூட்டாளியான பிண்டு மண்டல் பார்க்டவுனில் கைது செய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் பதுங்கியிருந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட அமல் என்பவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments