நிலுவையில் உள்ள 30.6 டிஎம்சி நீரை காவிரியில் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தல்

0 2744
நிலுவையில் உள்ள 30.6 டிஎம்சி நீரை காவிரியில் திறந்து விட வலியுறுத்தல்

கர்நாடக அரசு வழங்க வேண்டிய 30.6 டி.எம்.சி. காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம், டெல்லி மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்டார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர், ஆணையத்தின் உறுப்பினர், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், நிலுவையில் உள்ள 30.6 டி.எம்.சி. நீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments