மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு

0 6238

பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசிய புகாரில், எஸ்.வி.சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய புகாரில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் தொடர்ந்த வழக்கு நீதிபதி நிஷா பானு முன் விசாரணைக்கு வந்தது.

எஸ்.வி.சேகர் தரப்பில், முகநூல் பதிவை படிக்காமல் forward செய்து விட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறிக்கிட்ட நீதிபதி, பதிவை படிக்காமல் ஏன் forward செய்தீர்கள்? அவ்வாறு forward செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? என கேள்வி எழுப்பியதோடு, வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments