உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் - அமைச்சர் கே.என்.நேரு
உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி ஆழ்வார்தோப்பு குழுமிக்கரை சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்களை, சீரமைக்கும் பணியினை தொடக்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.
Comments