மது அருந்திய போது நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை

0 2919
மது அருந்திய போது நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெம்மக்கோட்டையைச் சேர்ந்த துப்பாக்கி முருகன் என்பவரது மகன் செல்வகணபதி நேற்றிரவு நண்பர்களுடன் இணைந்து மது அருந்திய போது வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

அதில், சின்னமுத்து என்ற இளைஞர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மது அருந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த செல்வகணபதியை துரத்திய ஒரு கும்பல், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments