புவி வெப்பமாதலால் மும்பையில் நாரிமன் பாயின்ட், கப் பரேட் கடலில் மூழ்கும் - மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங்

0 2875
புவி வெப்பமாதலால் மும்பையில் நாரிமன் பாயின்ட், கப் பரேட் கடலில் மூழ்கும்

புவி வெப்பமாவதால் கடல்மட்டம் உயர்ந்து மும்பையில் நாரிமன் பாயின்ட், தலைமைச் செயலகம், கப் பரேட் உள்ளிட்ட பகுதிகள் இரண்டாயிரத்து ஐம்பதாம் ஆண்டுக்குள் கடலில் மூழ்கிவிடும் என மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சகல் தெரிவித்துள்ளார். மும்பை பருவநிலைச் செயல் திட்டம், அதற்கான இணையத்தளம் ஆகியவற்றை மகாராஷ்டிரச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தொடக்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சகல் பருவநிலை மாற்றத்தால் மும்பையின் நான்கு வார்டுகளின் 70 விழுக்காடு பகுதிகள் கடலில் மூழ்கிவிடும் எனத் தெரிவித்தார். இத்தகைய விளைவுகள் மிகத் தொலைவில் இல்லை என்றும், முப்பதாண்டுக்குள் நிகழும் என்றும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments