தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என தகவல்

0 4329
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என தகவல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 10 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் புதிய இருபாலர் கல்லூரிகள் தொடங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தருமபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க்காடு ஆகிய இடங்களில் புதிய இருபாலர் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மகளிர் கல்லூரியும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments