நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது - கொலை மிரட்டல் வழக்கில் நடவடிக்கை

0 3088
நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது - கொலை மிரட்டல் வழக்கில் நடவடிக்கை

மேலும் ஒரு வழக்கில் எம்.கே.நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பட்டியலின சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக கைதாகி மீரா மிதுன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கடந்த ஆண்டு ஜோ மைக்கேல் என்பவர் அளித்த புகாரில், மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜோ மைக்கேல் அளித்த புகாரில் எம்.கே.பி.நகர் போலீசார், மீரா மிதுனை மீண்டும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டதற்கான வாரண்ட் ஆணையுடன் புழல் சிறையில் இருந்து நடிகை மீரா மிதுனை அழைத்து வந்த போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனிடையே, இந்த வழக்கில் மீரா மிதுனை இரண்டு நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதும் விசாரணை நடத்தப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments