காவிரி-குண்டாறு இணைப்புக்கு எதிர்ப்பு ; உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

0 2196
உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தகவல்

தமிழ்நாட்டின் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் சட்டவிரோதமானது எனக்கூறி உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றும் கூறினார். காவிரியில் கர்நாடகம் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் ஏகமனதாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

அத்துடன் இந்த அணைத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி வந்துள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அங்கு கர்நாடக வழக்கறிஞர்கள் மற்றும் நதி நீர் பங்கீடு தாவா தொடர்பான நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments