புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் ஆளுநர் உரை

0 5568

புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் உரை தமிழில் இடம்பெற்றது.

அத்தோடு, முதன்முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரும், பட்ஜெட் கூட்டத்தொடரும் ஒரே நாளில் தொடங்கியுள்ளது. சட்டமன்றத்திற்கு வந்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சபாநாயகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து, தமிழில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை, கொரானா பரவல் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார். எதிர்வரும் காலங்களில் வறுமை மற்றும் வேலையின்மை இல்லாத வளமை மிக்க பிரதேசமாக புதுச்சேரியை மாற்றுவீர்கள் என நம்புவதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments