அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் ஒரே ஆள் பல நகைக்கடன்கள் பெற்ற வகையில் 5896 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பெரியசாமி

0 4136
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் ஒரே ஆள் பல நகைக்கடன்கள் பெற்ற வகையில் ஐயாயிரத்து 896 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் ஒரே ஆள் பல நகைக்கடன்கள் பெற்ற வகையில் ஐயாயிரத்து 896 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுன் வரை அடகு வைத்து நகைக் கடன் பெற்றவர்களுக்குத் தள்ளுபடி செய்வது தொடர்பாகச் சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி பேசினார்.

ஒரே ஆள் பல வங்கிகளில் கடன் பெற்ற வகையில் 13 இலட்சத்து 91 ஆயிரத்து 656 பேர் மொத்தம் ஐயாயிரத்து 896 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மீனா என்பவர் 11 நகைக் கடன் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதற்கான முடிவை முதலமைச்சர் எடுப்பார் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments