உத்தவ் தாக்கரே குறித்த நாராயண் ரானேயின் சர்ச்சை பேச்சு : மும்பையில் பாஜக-சிவசேனா தொண்டர்கள் மோதல்

0 1638

முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவே ஓங்கி அறைந்திருப்பேன் என்ற மத்திய அமைச்சர் நாராயண் ரானேயின் பேச்சின் எதிரொலியாக மும்பையில், பாஜக-சிவசேனா தொண்டர்கள் மோதிக்கொண்டனர்.

சிவசேனா தொண்டர்கள் கட்சி கொடிகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பி மும்பை ஜுஹுவில் உள்ள நாராயண் ரானேயின் வீட்டை நோக்கி செல்ல முயன்றனர்.

அவர்களை பாஜக தொண்டர்கள் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் பரஸ்பரம் கல்வீச்சிலும் ஈடுபட்டதால் அங்கு கலவரச் சூழல் ஏற்பட்டது.

போலீசார் தலையிட்டு இரண்டு கட்சித் தொண்டர்களையும் பிரித்தனர். சிவசேனா தொண்டர்களை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே சிப்லனில்  தங்கி இருப்பதாக கூறப்படும் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை கைது செய்ய நாசிக்கில் இருந்து போலீஸ் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments