தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

0 3192

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 143 கல்லூரிகளில், தரவரிசைப் பட்டியல் அடிப்படையில், நேரடியாகவும், ஆன்லைன் வழியிலும் இளங்கலை படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

வரும் செப்டம்பர் 3-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து வகுப்புகளைத் தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், M.A., M.Sc., M.Com., போன்ற முதுகலை படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இணையதளத்தில் தொடங்கி உள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments