குற்றவழக்கு தொடர்பாக ஆஜராக வந்தபோது நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

0 3690
நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

சென்னை அடுத்த ஒரகடத்தில் குற்றவழக்கு தொடர்பாக ஆஜராக வந்தபோது நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஆழ்வார் திருநகரை சேர்ந்த மஸ்பூர் ரகுமான், பெண் வழக்கறிஞரை அவதூறாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ஒரகடத்தில் உள்ள அம்பத்தூர் நீதிபதி தனஞ்செயன் வீட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர்.

அப்போது மஸ்பூர் ரகுமான், நீதிபதியிடம் மரியாதையின்றி பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் மேலும் 6 பிரிவுகள் கீழ் வழக்கு பதிந்த போலீசார் மஸ்பூர் ரகுமானை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments