தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

0 4100
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளைய தினமும் டெல்டா உட்பட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் கனமழையும், சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சிலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments