மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், சிகரெட் திருட்டு ; கணவன் மனைவி கைது

0 2789
மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், சிகரெட் திருட்டு ; கணவன் மனைவி கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம், சிகரெட்டை திருடிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

வள்ளுவன் தெரு பகுதியிலுள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுளை திருடி சென்றனர்.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது திருட்டில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ரேவதி என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் பத்தாயிரம் ரூபாய் மற்றும் 50 சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments