கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயானிடம் மீண்டும் விசாரணை

0 3270

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.

கோடநாடு பங்களாவிற்குள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவிற்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவருமே நிபந்தனை ஜாமீனில் உள்ள நிலையில், சயான் மீண்டும் உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி ஆஹிஷ் ராவத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சுமார் 2 மணி நேரம் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments