ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

0 2608
ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை

பள்ளிகளைத் திறக்கு முன் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனோ தடுப்பூசி போடும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் சாரண சாரணிய இயக்க அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ், சாரண சாரணிய ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments