75ஆவது விடுதலை நாளையொட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

0 3104
75ஆவது விடுதலை நாளையொட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

பல்வேறு பாரம்பரியங்களைக் கொண்டிருந்தும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்வதைக் கண்டு உலகமே வியப்படைவதாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

75ஆவது விடுதலை நாளையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், தவறான பாதையில் விரைவாகச் செல்வதைவிடச் சரியான பாதையில் மெதுவாகவும் உறுதியாகவும் செல்வது சிறந்தது என மகாத்மா காந்தி தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

பல தலைமுறைகளாகப் போராடிப் பெரிய தியாகங்களைச் செய்த விடுதலைப் போராட்டத் தியாகிகளால் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்ததாகவும், இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் நாம் அவர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டவர்கள் என்றும் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments