சுருக்குமடி வலைப் பிரச்சனையால் கடலில் மீனவர்களிடையே மோதல்; கரையில் நின்ற 4 படகுகள் தீவைத்து எரிப்பு

0 3101

யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இரு ஊர்களின் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 படகுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

பூம்புகார், திருமுல்லைவாசல் மீனவர்கள் சுருக்கு மடி வலையால் மீன்பிடிக்கப் போவதாகக் கூறி விசைப்படகுகளுடன் கடலுக்குச் சென்றனர். இதையறிந்த வானகிரி மீனவர்கள் அவர்களைத் தடுப்பதற்கு பைபர் படகுகளுடன் கடலுக்குச் சென்றனர்.

விசைப்படகால் மோதியதில் பைபர் படகு உடைந்ததுடன் அதிலிருந்த வானகிரியைச் சார்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து வானகிரி மீனவர்கள் தங்கள் ஊருக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூம்புகார் மீனவர்களின் நான்கு படகுகளைத் தீவைத்து எரித்தனர்.

மீனவர்களிடையே மோதலையடுத்துப் பதற்றம் நிலவுவதால் கடலோரப் பகுதிகளில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments