இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கு ; சென்னை, திருவள்ளூரில் பல இடங்களில் என்ஐஏ சோதனை

0 1956
சென்னை, திருவள்ளூரில் பல இடங்களில் என்ஐஏ சோதனை

 ஈரான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியன கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் கடற்பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றுடன் சென்று கொண்டிருந்த படகை கடலோர காவற்படையினர் வழிமறித்து பொருட்களை பறிமுதல் செய்து இலங்கை நாட்டவர் 6 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கில், என்ஐஏ கடந்த ஜூன் மாதம் மறுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இந்த நிலையில், இந்த கடத்தலில் தொடர்பு உண்டு என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான சென்னை, திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டங்களில் 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments