புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, பிரதமர் மோடியுடன் சந்திப்பு

0 3048
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை, பிரதமர் மோடியுடன் சந்திப்பு

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்தரராஜன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதற்கு இரு மாநில வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்குமென பிரதமர் மோடி உறுதியளித்தார்.

தொடர்ந்து, கொரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கும், செய்த உதவிகளுக்கும், தற்போது கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோர் சட்ட முன் வரைவிற்கும் துணைநிலை ஆளுநர் சவுந்தராஜன், நன்றி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments